என் பெயர் ஆனந்தன்.என் சொந்த ஊர் திருச்சி.நான் தற்போது சென்னையில் ஒரு டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறேன்.எனக்கு சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் செய்வது மட்டுமே ஆர்வம் உண்டு,ஒருவருக்கு அடிமையாக வேலை செய்வதில் எனக்கு துளிகூட விருப்பம் இல்லை.எனவே எனது பெற்றோர்கள் எவ்வளவு எதிர்த்தும் தொழில்தான் செய்து வருகிறேன்.எங்கள் தொழிலில் நன்றாக நடந்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று ஆள் பற்றாக்குறை அவ்வப்போது ஆள் பற்றாக்குறை இருந்தாலும் எப்படியாவது நான் சமாளித்து கொள்வேன்.எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தனியாகவும் என்னால் தனியாக சமாளிக்க முடியவில்லை. பேன்சி ஸ்டோர்,ஸ்டுடியோ, ஜெராக்ஸ் கடை இதுபோன்ற கடைகள் எல்லாம் 9 மணிக்கு மேல் திறந்தால் போதும், ஆனால் டீக்கடையில் அதிகாலை நாலு மணிக்கு திறந்து இரவு பத்தரை வரை நடத்திய ஆக வேண்டும்.நாங்கள் ரெகுலராக கம்பெனிக்கு டீ சப்ளை செய்து வந்தோம்.அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டும் வந்துள்ளேன்.எனவே நான் எதையும் சிக்கனமாக செலவு செய்ய மாட்டேன் நல்ல தாராளமாக செலவு செய்து வந்துள்ளேன்.
எங்கள் வீட்டில் எனக்கு ஆதரவு இல்லாததால்
என் நண்பனிடம் கடன் வாங்கித்தான் தொழில் செய்து வந்தோன்.இதனால் எனக்கு நாலு லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. லாபம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது அந்த கடனை அடைக்காமல் வட்டியும் சரியாக செலுத்தாமல் வீண்செலவு நிறைவாகவே செய்து வந்தேன்.தேவையற்ற இடங்களில் பல செலவுகள் செய்வேன்.உதாரணத்திற்கு என் கடையில் இருக்கும் டைனிங் டேபிள் கூட 12,000 போட்டு வாங்கினேன்.ஆனால் அதே டைனிங் டேபிள் பிளாஸ்டிக் வாங்கினால் வெறும் 1000 1500 அவ்வளவுதான் வரும்.இதுபோன்ற தேவையற்ற செலவு நிறைய செய்வோன். இது போன்ற நிறைய செலவு செய்ததால் என்னால் கடனை அடைக்க முடியவில்லை கடை திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டனர். என் கடையில் வேலை செய்யும் பயனும் அடிக்கடி லீவு போட்டு கொண்டிருந்தான்.ஆகையால் ஒரு சில தினங்களில் அவன் வேலைக்கு வருவதையே நிறுத்திவிட்டான்.வாங்கிய கடனுக்கு வட்டி மேல் வட்டி ஏறி என்னால் கட்ட முடியவில்லை.ஆரம்ப காலத்தில் கடினமாக உழைத்து முன்னேற்றம் என் கடையை போகப்போக சலித்துக் கொண்டு அவ்வப்போது கடையை மூடி மூடித் திறந்தேன்.
வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தவர்கள் அதைப்பற்றி எனக்கு கவலை இருந்தாலும் பெரிதாக கவலைப்படவில்லை.எனக்கு ஒரு காரணம் என்னவென்றால் ஆள் பற்றாக்குறை தான் என்னால் மட்டும் தனியாக எப்படி சமாளிக்க முடியும் என்று என்னிடம் நான் பேசிக்கொண்டிருப்பேன்.இதுபோன்ற கடையை அடிக்கடி மூடி மூடி திறந்ததால் கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்து வந்தால் அவர்களுக்கு டீ சரியாக கிடைக்காததால் கம்பெனி ஆர்டரை ரத்து செய்தனர்.என்னால் மேலும் கடைகளுக்கு வாடகைக்கு,கரண்ட் பில் செலுத்தி பால் காசு கொடுத்து என்னால் நடத்த முடியவில்லை.பொருள் வாங்குவது கூட காசு இல்லை.அந்த சூழ்நிலையில் நான் தள்ளப்பட்டேன்.இது போதாதென்று இந்த காலகட்டத்தில் தான் கொரோன நம் நாட்டை தாக்கியது.ஆகையால் 144 உத்தரவின் பெயரில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிய இருக்க வேண்டும். என்று அரசு உத்தரவு ஒரு பக்கம் கடன் சுமை ஒரு பக்கம் கடைக்கு வாடகை கொடுக்க வேண்டும் இன்னொரு பக்கம் கரண்ட் பில் செலுத்த வேண்டும் அது மட்டுமின்றி நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு கூட வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். என்ன வாழ்க்கை என்று பேசாம செத்து போய் விடலாம் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் என்னால் தாங்க முடியாமல் ஊருக்கு வந்தேன்.அதைப்பற்றிய சிந்தனை எனக்கு தோன்றியது நான் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டேன் என்று புலம்பி தள்ளிக் கொண்டே இருந்தேன்.என்னால் எந்த காரியத்தையும் மேலும் கவனம் செலுத்த முடியவில்லை கவனம் சிதறி கொண்டே இருந்தது.எனக்கு அவ்வப்போது டைரி ஏதோ எழுதும் பழக்கம் இருந்து கொண்டே இருந்தது.
அன்று இரவில் நான் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும்போது மேரி கோல்ட் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அனைத்தும் பிஸ்கட்டும் காலியானது. கடைசியில் இரண்டு பிஸ்கட் மட்டும் இருந்தது அதில் ஒன்றை சாப்பிட்டு விட்டு இன்னொன்றை என் டைரி மீது வைத்துவிட்டு சில நேரங்களுக்குப் பிறகு சில எறும்புகள் அதை கொஞ்சம் கொஞ்சமாக கொதிக்கத் தொடங்கியது. நான் சிறிது கேவலமாக சிந்தித்துக் கொண்டிருந்தேன்.இவ்வளவு பெரிய பிஸ்கட்டை எறும்பு எப்படி தூக்கிக்கொண்டே போகப்போகிறது எதற்கு இவ்வளவு பெரிய பிஸ்கட்டுகள் மீது அதை ஆசைப்படுகின்றனர்.அதன் எடையை விட பிஸ்கட்டின் விட ஆயிரம் மடங்கு அதிகம் என்று கூட கூறலாம். அன்று இரவு அப்படியே யோசித்துக்கொண்டே உறங்கினேன் என் கனவில் கூட என் வாழ்க்கையில் சோதனைகள் பற்றியே ஓடிக்கொண்டிருந்தது.காலையில் விழுந்தது இணைந்து முகம் கழுவிவிட்டு சற்று என்று எதோ நோட் செய்து வைக்கலாம் என்று டைரியை தேடினேன்.
கடைசியில் பார்த்தால் இரவு எறும்பு ஏறிக்கொண்டிருந்த பிஸ்கட்டில் முக்கால்வாசியை எரும்பு கரைத்துக்கொண்டு போய்விட்டது. ஒரே இரவில் எறும்பின் கடின உழைப்பால் அதன் எடையை விட ஆயிரம் மடங்கு இருக்கும் பிஸ்கட்டை அரித்து எடுத்து சென்றுவிட்டனர்.அதுவும் இப்போது அதனை அனைத்தும் சாப்பிட முடியாது அது எதிர்காலத்துக்கு தான் சேமித்து வைத்திருக்கும் ஆனால் மழை பெய்து எறும்பு புதுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் சேமித்து வைத்த அனைத்து உணவுப் பண்டங்களும் வீணாகிவிடும். இது எறும்புகள் தெரியும் இருந்தாலும் அதன் மூலம் சேமிப்போம் எப்போதும் நிறுத்தவில்லை எனவே என் எதிர்காலம் கருதி நான் வருத்தப்படுவதை விட என் என் உழைப்பும் உழைப்பினால் வரும் பணத்தையும் சேமித்து வைத்தால் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும் என கருதினேன் விடிவுகாலம் பெறுவதற்காக தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறேன்.நன்றி.
உங்களையும் யாராவது ஏன் பெரிதாக ஆசை படுகிறாய் என்று கேட்டால் உங்களை நீங்களே இரும்பாக நினைத்துக்கொள்ளுங்கள் வாழ்வில் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள் வாழ்த்துக்கள்